மாமியாரை வெட்டிப்படுகொலை செய்த மகன்.. காரணம் என்ன?.. பதைபதைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கடனை அடைக்க வீட்டு பத்திரத்தை கொடுக்காத மாமியாரை மருமகன் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியைச் சார்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி மோகனப்பிரியா. சதாசிவம் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தின் வறுமையைப் போக்க அடிக்கடி கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் கடனை திரும்பச் செலுத்த இயலாத அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடனை திரும்பச் செலுத்த வீட்டு பத்திரத்தை கொடுக்குமாறு மாமியார் சாந்தாமணியிடம் சதாசிவம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று மதுபோதையில் மாமியாரிடம் சென்று சண்டையிட்ட சதாசிவம், ஆத்திரத்தில் அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து, இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மருமகன் சதாசிவத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Woman Santhamani Murder by Daughter in Law Sadha Sivam 2 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->