வாழை தோரணம் கட்டி, பூஜை போட்டு தயாரான மதுபான கடை.. டாஸாக் சம்பவங்கள்..!!
Coimbatore wine shop ready to sales
தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளை முதல் துவங்கவுள்ள நிலையில், மதுபான கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும் என்றும், இந்த நேரத்தில் அணைத்து தரப்பினரும் மது வாங்க குவிந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால் நேரம் அறிவிப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையினர் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், சமூக இடைவெளியை கடைப்பிக்கின்றனரா? என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப்போன்று டாஸ்மாக் கடைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையம் செயல்படவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
இதனைப்போன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மதுபானம் வாங்கலாம் என்றும், மதியம் 1 மணிமுதல் 3 மணிவரை 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 40 வயதிற்குள் இருக்கும் நபர்களும் மதுபானம் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் வாழை மர தோரணம் கட்டி, பூசைகள் செய்து மதுவிற்பனைக்கு தயார் நிலையில் டாஸ்மாக் மது கடை தயாராகியுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore wine shop ready to sales