சரக்கு பிரிப்பதில் தகராறு.. மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை புதுகாலணி பகுதியை சார்ந்தவர் மாணிக்கம் (வயது 62). இவரது மனைவியின் பெயர் பழனாள் (வயது 57). மாணிக்கம் மற்றும் பழனாளிற்கு இடையே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று மதுபான கடையில் இருந்து 6 மதுபான பாட்டிலை மாணிக்கம் வாங்கி வந்த நிலையில், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். 4 பாட்டில் மது மாணிக்கத்திற்கும், 2 பாட்டில் உனக்கும் என மாணிக்கம் கூறியுள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத பழனாள் தனக்கு 3 மதுபாட்டில்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மது பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடுமையான ஆத்திரம் அடைந்த மாணிக்கம் கட்டையை எடுத்து மனைவியின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதனால் பழனாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore wife murder by husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->