மனைவியை குழந்தைபோல தூக்கிவந்து கொரோனா தடுப்பூசி செலுத்திய ஜோடி.. கோவையில் நெகிழ்ச்சி.!
Coimbatore Thudiyalur Aged Couple Inject Corona Vaccine At Thudiyalur Govt Hospital 1 May 2021
நடக்கமுடியாத தனது மனைவியை குழந்தை போல தூக்கி சென்று, கொரோனா தடுப்பூசி போட வைத்த முதியவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் என்.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 76). இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 69). விஜயலட்சுமிக்கு நடக்க முடியாது என்பதால், கணவர் ஜெகநாதன் தனது மனைவியை குழந்தை போல பார்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக முதியவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில், தனக்கும் - தனது மனைவிக்கும், அருகில் உள்ள இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட ஜெகநாதன் முடிவு செய்துள்ளார்.
இதற்காக துடியலூர் அரசு மருத்துமனையில் ஜெகநாதன் டோக்கனும் வாங்கியுள்ளார். இதன் பின்னர், தன் மனைவிக்கு நடக்க முடியாது என்பதால், தன் கையிலேயே அவரை குழந்தையைப் போல தூக்கி காரில் வைத்து பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் காரில் இருந்து இறங்கி, குழந்தையை போல மீண்டும் மனைவியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஸ்ட்ரக்சர் அல்லது பிற உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல், மனைவியை குழந்தை போல தூக்கிச் சென்றது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இதன் பின்னர், தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட அவர்கள் புறப்பட்ட நிலையில், மீண்டும் தனது மனைவியை தூக்கி காரில் ஏற்றி வீட்டிற்கு சென்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Thudiyalur Aged Couple Inject Corona Vaccine At Thudiyalur Govt Hospital 1 May 2021