கோவை: ஆண்மையல்லாதவனுக்கு எதுக்கு ஆசை?.. கேள்வி கேட்ட மனைவியை கொலை செய்து பிணத்துடன் நெருக்கம்..! - Seithipunal
Seithipunal


தாம்பத்திய உறவுக்கு ஆண்மையல்லாத காரணத்தால் மறுப்பு தெரிவித்த மனைவியை கொலை செய்து கணவன் சொந்த ஊருக்கு சென்ற பயங்கரம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் பாண்டியராஜன் (வயது 37). இவர் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (வயது 35). 

கடந்த 10 ஆம் தேதி ஆடைகள் கலைந்த அரைநிர்வாண நிலையில் மல்லிகா தனது இல்லத்தில் உயிரிழந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், மல்லிகாவுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்னதாக வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் உறவினரின் வீட்டில் தங்கியிருக்கின்றனர். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பெண்மணி, பொள்ளாச்சியில் உள்ள வடக்கிபாளையம் பகுதியில் 5 வருடத்திற்கு முன்னதாக வந்து தங்கியுள்ளார். 

இதன்போது, உணவகத்தில் பணியாற்றி வந்த பாண்டியராஜனுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருவருக்கும் அங்குள்ள தொண்டாமுத்தூர் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற தகராறில், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாண்டியராஜன் தலைமறைவாகியுள்ளார்.

பாண்டியராஜனை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், பாண்டியராஜனின் சொந்த ஊரில் வைத்து அவனை கைது செய்தனர். விசாரணையில், " மல்லிகாவை நான் சம்பவத்தன்று உல்லாசமாக இருக்க அழைத்தேன். அவர் உன்னால் அது முடியாது. உனக்கு ஆண்மை போய்விட்டது., படுத்து உறங்கு என்று தெரிவித்தார். 

மேலும், என்னை கேவலமாகவும் பேசியதால் ஆத்திரத்தில் இருந்த நான் அவரை கழுத்தை நெரித்தேன். அவர் மயங்கியதும், அப்படியே அவருடன் தாம்பத்தியம் மேற்கொண்டு உறங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஆட்டோவில் உக்கடம் சென்று சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன் " என்று தெரிவித்துள்ளார். 

இளம் வயதில் கண்டதை பார்த்து தேவையில்லாததை அளவுக்கு அதிகமாக செய்வது, மது-புகை போன்ற தீய பழக்கத்தை கையில் வைத்திருப்பது, ஆலோசனை கூறுபவர்களை அருவருக்கத்தக்க வகையில் பேசி விரட்டுவது என இருந்துவிட்டு, திருமண பந்தத்திற்குள் நுழைந்ததும் ஆண்மை போய்விட்டது என அலறுவது. உண்மையை சொன்னால் மனைவியை கொலை செய்வது. இதெல்லாம் ஒரு பிழைப்பு, தீய பழக்கத்தை தூக்கி நிமிர்த்த ஒரு கூட்டம்.. அறிவிளி ஜீவிகளே திருந்துங்கள்.. இல்லையேல் வாழ்க்கையின் பெரும்பகுதி துன்பமாகிவிடும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Thondamuthur Husband Pandiyarajan Murder Wife Malliga decline Sexual intercourse due to he not able


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->