பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்... பெண்ணின் தந்தையை கொலை செய்த பயங்கரம்.!
Coimbatore Sulur Kumarapalayam George Murder by Karthick due to Marriage girl Issue
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜான் ஏஞ்சல். இவர், அதே பகுதியில் தனியார் கயிறு ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செலின் ரோமிலா. இவர் ஓடக்கல்பாளையம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து, அவர் கணவருடன் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், இளையமகள் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இரண்டாவது மகளை திருமணம் செய்ய, அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவர் பெண் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவிக்கவே, சமீபத்தில் இரண்டாவது மகளுக்கு உறவினர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த விஷயத்தை அறிந்து ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த திங்கள்கிழமையன்று ஜார்ஜ் வீட்டிற்குச் சென்று, தனியாக இருந்த அவரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆத்திரமடைந்த கார்த்திக் தான் கொண்டு வந்து இருந்த கத்தியால் ஜார்ஜை குத்தி கொலை செய்துள்ளார்.
இதன் பின்னர் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து, கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களை அழைத்து ஜார்ஜ் கொலை செய்யப்பட்டதும், தான் விஷம் குடித்த தகவலையும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், வீட்டிற்கு வந்து கார்த்திகை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜார்ஜின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Sulur Kumarapalayam George Murder by Karthick due to Marriage girl Issue