அரைகுறை ஆடையுடன் உலாத்தும் கொள்ளையர்கள்.. பதறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இருகூர் தீபம் நகர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேலாடையின்றி கைகளில் கட்டை உள்ளிட்ட ஆயுதத்துடன் வளம் வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இத நாளில் அங்குள்ள பீளமேடு பகுதியில் 3 பேர் முகத்தில் துணியை அணிந்துகொண்டு, அரைகுறை ஆடையுடன் சுற்றி வந்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கிறது.

பீளமேடு பகுதியில் ஏற்கனவே 3 வீடுகளின் பூட்டினை உடைத்து திருட்டு முயற்சியும் நடத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக சிங்காநல்லூர் பகுதியில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபர்கள், சந்தன மரத்தை வெட்டி கடத்தும் காட்சியும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore robbers search by police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->