நம்பர் 1 க்கு தெரியாமல் ஒன்று, 2 க்கு தெரியாமல் இன்னொன்று என 3 திருமணம்.. கயவனை நம்பர் 2 வுடன் தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


முதல் மனைவிக்குத் தெரியாமல் மேலும் 2 பெண்களை திருமணம் செய்த கணவன் இரண்டாவது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோதி முருகேஸ்வரி. இவருக்கும், கரூரை சார்ந்த பாலசுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2011 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. 

ஜோதி முருகேஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் சென்ற சமயத்தில், பாலசுப்பிரமணியம் நித்யா என்ற பெண்ணை 2 ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் பின்னர், இரண்டாவது மனைவி நித்யாவுக்கும் தெரியாமல் மூன்றாவதாக சுதா என்ற பெண்மணியை கடந்த வருடம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கணவனின் பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கும் விஷயம் முதல் மனைவிக்கு தெரியவரவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பாலசுப்பிரமணியம் மற்றும் இரண்டாவது மனைவி நித்யாவை கைது செய்து இருக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Pollachi Woman Cheated by Husband Balasubramani He Married 3 Woman Police Arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->