15 வயது சிறுமிக்கு குழந்தை.. மாற்றுத்திறனாளியின் கொடூரத்தால் சோகம்.. பொள்ளாச்சியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 15 வயது சிறுமி, தனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அலறித்துடித்துள்ளார். 

இதனைக்கண்டு பதறிப்போன தாய் தனது மகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதற்குள்ளாக, சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய மருத்துவர்கள், பொள்ளாச்சி மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்கையில், சிறுமியின் வீட்டருகே இருக்கும் 49 வயது மாற்றுத்திறனாளி குருசாமி, சிறுமியை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் குருசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடித்தனர். மேலும், சிறுமி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Pollachi 15 Aged Child Sexual Abused by Physically Challenged Person Girl Delivery Male Baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->