பிளாஸ்டிக் குண்டு காதில் சிக்கி கலங்கிய சிறுவன்.. பதறிப்போன பெற்றோர்கள்.. கோவை அரசு மருத்துவர்களின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இராமநாதபுரம் பகுதியை சார்ந்த பெண் காவல் அதிகாரியின் மகன் கிஷோர். கிஷோர் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில், திரைப்படங்களைப் பார்த்து அதில் வருவதுபோல பொம்மை துப்பாக்கியை வைத்து தனக்கு தானே தன் தலையில் விளையாட்டுத்தனமாக சுட்டு விளையாடிக் கொண்டிருந்தார். 

இதன்போது, அந்த பொம்மை துப்பாக்கி குண்டு தவறுதலாக சிறுவன் கிஷோரின் காதில் சிக்கிக் கொண்ட நிலையில், வலி பொறுக்க முடியாமல் சிறுவன் அழத் தொடங்கினான். இதனையடுத்து பெற்றோர்கள் விசாரித்து குண்டை எடுக்க முயற்சித்தும் பலனில்லை. 

இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்ற நிலையில், அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், அங்குள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, அங்கும் மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர். 

பயந்து போன பெற்றோர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவனைக்கு சென்றனர். அங்கு மருத்துவர்களிடம் வசியத்தை தெரிவிக்கவே, பணியில் இருந்த மருத்துவர் மணிகண்டன் மற்றும் முதுகலை இரண்டாம் வருடம் பயின்று வந்த மருத்துவ மாணவி நித்யா, சிறுவன் காலில் தண்ணீர் பீச்சி அடித்து பிளாஸ்டிக் குண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். 

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் இருவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியாக மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Parents Shock Fake Bullet on Child Ear Coimbatore Govt Hospital Doctors Remove it


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->