சொல்லச்சொல்ல கேட்காமல் செயல்பட்ட தறுதலை... தண்டவாளத்தில் தலைவைத்து செத்தது..!
Coimbatore Online Rummy Player Suicide Loss Money in Railway Track
கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் கால் டாக்ஸி ஓட்டுனர் எல்வின் பிரெடரிக். 29 வயதாகும் பிரெடரிக் மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், பகுதிநேர வேலையாக கால் டாக்சி ஓட்டி வந்துள்ளார்.
இதில் கிடைத்த வருமானத்தை சேமித்து எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று எண்ணியிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பல இலட்சம் பணத்தை ரம்மியில் விட்ட நிலையில், விட்டதைப் பிடிக்க நினைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும் அதில் இழந்துள்ளார். இந்நிலையில், அரசு தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில், திருட்டுத்தனமாக இயங்கிவந்த ரம்மியை விளையாடி பெரும் பணத்தை இழந்துள்ளார்.
கடந்த 4 ஆம் தேதி வரை மொத்தமாக ரூ.5 இலட்சத்து 60 ஆயிரம் பணத்தை பறி கொடுத்துள்ள நிலையில், பணம் அனைத்தையும் இழந்த விரக்தியில் வீட்டினை விட்டு வெளியேறியுள்ளார். இவரை காணாமல் பதறிப்போன உறவினர்கள், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் இரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் எல்வினின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்தும், காவல் அதிகாரிகள், நீதிமன்றம், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் என பலரும் எச்சரித்த நிலையில், பணம் என்ற ஆசையில் வாலிபரின் உயிர் பறிபோயுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுத்தனமாக கூட இந்த செயலியில் விளையாட கூடாது என்றும், நமது வங்கிக்கணக்கை கண்காணித்து, அவ்வப்போது சிறிய அளவிலான தொகையை வெற்றியடைந்து தருவது போல ஆசை காண்பித்து பெரும் மோசத்தில் இச்செயலி ஈடுபடும் என்றும் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Online Rummy Player Suicide Loss Money in Railway Track