ஊறுகாய் கேட்டதில் தகராறு... வாலிபரை அடித்தே கொலை செய்த, வடமாநில இளைஞர்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள தொழில் நிறுவனமானது இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சார்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். 

பிகார் மாநிலத்தை சார்ந்த சித்துகுமார் (வயது 17) மற்றும் பஜிராங்கி குமார் (வயது 20) ஆகிய இருவரும் இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலயில், கடைக்கு மேலே உள்ள மாடியில் தங்கியிருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி உணவு சமைப்பதில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல உணவு சமைத்து சாப்பிடுகையில் ஏற்பட்ட தகராறில், பஜிராங்கி குமார், சித்து குமாரிடம் ஊறுகாய் கேட்டுள்ளார். 

ஆனால், சித்துகுமார் ஊறுகாயை மறைத்துவைத்து விளையாடிய நிலையில், ஆத்திரமடைந்த பஜிராங்கி குமார் சித்துகுமாரை தாக்கியுள்ளார். இதனால் சித்துகுமார் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சித்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பஜிராங்கி குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore North Indian Youngster Murder due to Fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->