கோவையில் இருந்து இரவு நேரத்தில் வடமாநிலத்திற்கு புறப்படும் பேருந்துகள்..!!
Coimbatore Nighttime Lockdown Offence by North Indian Workers went Native 29 April 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு, பேருந்துகளும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் லாரிகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மூலமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து ஒடிசா, பீகார், ஜார்கண்ட் போன்ற வட மாநிலத்திற்கு பேருந்துகள் முறைகேடாகவும் இயக்கப்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளன.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Nighttime Lockdown Offence by North Indian Workers went Native 29 April 2021