திருமணம் முடிந்த 7 ஆவது நாள்.. உறவினர்களை கண்ணீரில் தவிக்க விட்ட புதுமணப்பெண்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்தவர் ஆரோக்கிய ராஜ் (வயது 31). அங்குள்ள வெள்ளலூர் பட்டணம் ரோடு பகுதியை சார்ந்தவர் அந்தோனிதாஸ். 

அந்தோனிதாசின் மகள் கிறிஸ்டினா (வயது 27). இவர்கள் இருவருக்கும் கடந்த 27 ஆம் தேதி பெரியோர்கள் முன்னணியில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், நேற்று கிறிஸ்டினா நேற்று வீட்டில் பிணமாக தூக்கிட்டு தொங்கியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிறிஸ்டினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கிறிஸ்டினாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து 7 நாட்களே ஆகும் நிலையில், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore New married girl suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->