திருமணம் முடிந்த நான்கே நாட்கள்.. தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட மணமகன்.. அதிர்ச்சியில் பெற்றோர்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருரை அடுத்துள்ள சென்னனூர் பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 28). இதே பகுதியை சார்ந்த பெண்மணி மஞ்சுளா (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. 

இவர்களின் காதலிற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 5 ஆம் தேதியன்று பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் 3 நாட்களாக கணவன் - மனைவியும் அங்குள்ள பகுதியில் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதியன்று மஞ்சுளாவின் பெற்றோர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில், கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் மஞ்சுளா கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி பெற்றோருடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்த 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், முதலில் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்த கோவிந்தராஜின் பெற்றோர், மகனின் இறப்பு செய்தியை அறிந்ததும் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore New Love Married man Attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->