கோவை கடற்படை அதிகாரியை சென்னையில் கடத்தி, மும்பையில் எரித்த கொடூர கும்பல்..!
Coimbatore Navy Officer Murder by Kidnap Gang 7 Feb 2021
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடற்படை பயிற்சி மையமான ஐ.என்.எஸ் அக்ரானியில் பணியாற்றிய சூரஜ் குமார் துபே, சொந்த ஊருக்கு சென்றுவிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் இருந்து விமானம் மூலமாக ஜனவரி 30 ஆம் தேதி சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், இரவு 9 மணிக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வருகையில், துப்பாக்கி முனையில் சூரஜ் குமாரை கடத்திச் சென்ற மூவர் சென்னையில் அறை எடுத்து, மூன்று நாட்கள் அடைத்து வைத்து ரூபாய் 10 இலட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதன்பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கருக்கு கடத்திச் சென்ற கும்பல், பணம் கொடுக்க மறுத்ததால் அவரது கை, கால்களை கட்டி போட்டு காட்டிற்குள் உயிருடன் தீ வைத்துள்ளனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.
பின்னர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், கடற்படை அதிகாரி என்பது தெரியவந்ததால் மும்பையில் இருக்கும் கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியில் தனக்கு நேர்ந்த கொடுமையை காவல்துறையினர் கூறிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வாக்குமூலம் அளித்தவாறு பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை காவல் துறையினர் உதவியுடன் மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் இணைந்து விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Navy Officer Murder by Kidnap Gang 7 Feb 2021