வாலிபரை அடித்து கொலை செய்த திருநங்கைகள்?.. கோவையில் பயங்கரம்...!!
Coimbatore murder case police investigation
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாலிபரின் சடலம் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கொலையாகியுள்ள வாலிபர் தருமபுரி பகுதியை சார்ந்த ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. ரமேஷிற்கு ரைசா என்ற திருநங்கையுடன் பழகி வந்துள்ளார்.
இதனைப்போன்று மஞ்சு என்ற திருநங்கையுடன் பழகி வந்த நிலையில், ரமேஷிற்கும் - ரைசாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு அதிகமாகி, கொலை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். இதனால் ரைசா மற்றும் மஞ்சுவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore murder case police investigation