ஆற்றில் குளிக்க சென்ற தாய், 2 மகள்களுக்கு நேர்ந்த சோகம்.. ஒருவர் பின் ஒருவராக அரங்கேறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சார்ந்தவர் கண்ணம்மாள். இவருக்கு சந்தியா என்ற 18 வயதுடைய மகளும், சத்யா என்ற 15 வயதுடைய மகளும் உள்ளனர். 

இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வரும் நிலையில், இன்று இவர்கள் மூவரும் அங்குள்ள ஆனைமலை ஆற்றில் குளிக்க முடிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர். துவைக்க வேண்டிய துணிகளையும் உடன் எடுத்து சென்ற நிலையில், மூவரும் ஆற்றில் குளித்துள்ளனர். 

இந்த சமயத்தில், மூவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கிக்கொள்ளவே, மூவரும் நீரில் தத்தளித்து பரிதாபமாக பலியாகியுள்ளனர். அங்குள்ள நபர்கள் இவர்கள் தத்தளிப்பதை பார்த்து உதவி செய்ய முயற்சித்தும்  பலனளிக்கவில்லை. 

இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரையும் மீட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நீரில் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore mother and daughter died in river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->