தந்தை வாங்கிவரும் பரோட்டாவிற்காக காத்திருந்த குழந்தைகள்.. கொடும்பாவிகளாக ஹோட்டல் உரிமையாளர்கள்..!
Coimbatore man Murdered by Hotel Persons Getting Parotta to his Children and wife
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியை சார்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 37). இவர் பெயிண்டராக பணியாற்றி வரும் நிலையில், திமுகவின் கிளை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று பணியை முடித்து வீட்டிற்கு வந்த ஆரோக்கியராஜ் சிறிது நேரம் குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்துள்ளார். பின்னர், இரவு நேரம் ஆகிவிட்டதால், உணவகத்தில் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என மனைவி மற்றும் குழந்தைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பரோட்டா வாங்க ஆரோக்கியராஜ் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்ற நிலையில், கடையில் பரோட்டா வாங்கியுள்ளார். இதன்போது, குறைந்தளவு குருமா வைத்து கடைக்காரர் பார்சலை தயார் செய்யவே, இதனைக்கண்ட ஆரோக்கியராஜ் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள், குருமா கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த உணவகத்தின் உரிமையாளர், நீங்கள் வழங்கிய பணத்திற்கு ஏற்றாற்போல குருமா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, உணவாக உரிமையாளரின் நண்பர் முத்து உட்பட 3 பேர் சேர்ந்து ஆரோக்யராஜை அடித்து உதைத்துள்ளனர். இதனால் ஆரோக்கியராஜ் மயங்கி விழவே, அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சூலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சூலூர் மருத்துவமனையில் ஆரோக்யராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் உடனடியக உணவகத்தின் உரிமையாளர் கரிகாலன், பரோட்டா மாஸ்டர் கருப்பசாமியை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள முத்துவை தேடி வருகின்றனர்.
மேலும், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திமுகவினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore man Murdered by Hotel Persons Getting Parotta to his Children and wife