காதலை ஏற்க மறுத்த பெண் சரமாரி குத்தி கொலை.. கோவையில் பரபரப்பு..!!
Coimbatore love torture girl murder police investigation
பெண்களை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்து வற்புறுத்தி வரும் காமுகன்கள், பெண்கள் அக்காதலை ஏற்க மறுத்தால், அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவு செய்து பணம் பறிப்பது, கொலை செய்வது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் எண்ணிலடங்கா உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும், கொலை செய்யும் கொடூரன் சில வருடத்தில் சிறையில் இருந்து வெளியே வந்து தன் வாழ்க்கையை மறுசீரமைக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் தங்களின் மகளை எண்ணி வாழ்நாள் முழுவதும் கலங்கி இருக்கிறது.
இந்த சூழ்நிலை இன்றளவும் தொடர்ந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடுத்த சோகம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறுமுகக்கவுண்டனூர் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம் முதல் வருடம் பயின்று வருகிறார்.
இவரை அப்பகுதியை சார்ந்த ரித்திஷ் என்பவன் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்த நிலையில், மாணவி காதலை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவியின் இல்லத்திற்கு என்று கொடூரன், நள்ளிரவில் பிரச்சனை செய்து ஐஸ்வர்யா மற்றும் அவரின் தந்தையை கத்தியால் குத்தியுள்ளான்.
இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சூழலில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்படவே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் கொடூரன் ரித்திஷை தேடி வருகின்றனர். தமிழகத்தில் நாடகக்காதல் கொலையால் நவீனா, திலகவதி போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தொடர்கதையாகியுள்ளது.. என்று தான் இந்த கொலை குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்று பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் பரிதவித்து வருகின்றனர்..
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore love torture girl murder police investigation