சுயமரியாதை மேரேஜ்.. பெண்ணை அழைத்து சென்ற தந்தை.. கணவன் கண்ணீர் கதறல்.!!
Coimbatore Love married couple
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையார்பாளையம் வித்யா காலனி பகுதியை சார்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). திருச்சி மாவட்டத்தினை சார்ந்த பெண்மணி தமிழினி பிரபா (வயது 25). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 5 ஆம் தேதி கோயம்புத்தூரில் சுயமரியாதை காதல் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதியன்று பெண்ணின் தந்தை மற்றும் தாய், அவரது உறவினர்கள் தன்னையும், தனது தாயாரையும் தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்றதாக கூறி கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், கார்த்திகேயனும், பெண்மணியும் மாற்று சமூகத்தினராக இருந்து வரும் நிலையில், இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Love married couple