என்னை யாரும் கடத்தவில்லை.. காதல் திருமணம் செய்த பெண்மணி வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் இடையார்பாளையம் பகுதியை சார்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சியை சார்ந்த சக்தி தமிழினி பிரபா என்பவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இருவரின் காதலிற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, கார்த்திகேயனின் வீட்டார் சம்மதத்துடன் கடந்த 5 ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் சுயமரியாதை காதல் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இந்த திருமணத்திற்கு கார்த்திகேயன் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், பெண் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், திருமணம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, கார்த்திகேயனின் இல்லத்தில் புதுமண தம்பதிகள் இருந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி இரவன்று கார்த்திகேயனின் இல்லத்திற்கு சென்ற சக்தி தமிழினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கார்த்திகேயன் மற்றும் அவரது தாய் வசந்தகுமாரியை தாக்கி பெண்ணை அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் மீது கொலை மிரட்டல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவே, தனிப்படை காவல் துறையினர் சக்தி தமிழினியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், பெற்றோர்கள் தன்னை கடத்தவில்லை என்றும், இரண்டு வாரத்தில் பெற்றோர்களிடம் சமாதானம் செய்துவிட்டு கணவரின் இல்லத்திற்கு வந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். எழுத்துபூர்வமாக தமிழினி காவல் துறையினரிடம் தகவல் அளித்துள்ள நிலையில், பெற்றோருடன் புதன்கிழமை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Love Marriage couple Kidnap Case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->