கோவை: காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி.. மாமன் மகன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபார்க் பொன்னையராஜாபுரம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 21). இவர் ரேஸ்கோர்சில் இருக்கும் தனியார் காபி கடையில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், உறவினரான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சார்ந்த 19 வயது மாணவியை, கடந்த 3 வருடமாக காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது இருவரும் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.

இருவரும் உறவினர்கள் என்பதால் எதிர்ப்பு இல்லாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரி மாணவி தில்லைநகரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சென்ற விஷ்ணு, உறவினர்கள் முன்னிலையில் மாணவியை திருமணம் செய்து வைக்க கூறி கோரிக்கை வைத்துள்ளார். 

திடீரென கல்லூரி மாணவி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், சினிமாவில் நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கவே, மனவேதனையடைந்த விஷ்ணு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக வெட்டியுள்ளார். 

நிலைகுலைந்துபோன மாணவி சரிந்து விழவே, அவரை மீட்ட உறவினர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Love girl Murder Attempt by Love Boy 2 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->