கோவை: பண்ணை காவலாளி அடித்துக்கொலை.. மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!
Coimbatore Kinathukadavu Farm Security Murder by Strangers 28 March 2021
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு கோடாங்கிபாளையம் சர்வோதயா சங்கம் காந்தி பண்ணையில், கட்டில் உட்பட பல பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தூரம்பாடி பகுதியை சார்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி சித்ராவுடன் (வயது 53) அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணைக்குள் 3 வீடுகள் உள்ளது. இரவு 10 மணிக்கு பண்ணையின் பிரதான வாயிலை அடைப்பதை செல்வராஜ் வழக்கமாக வைத்திருந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல தனது மிதிவண்டியில் செல்வராஜ் பிரதான வாயிலை அடைக்க சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த சித்ரா கணவரின் அலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பலனில்லை. இரவு வேளையில் திடீரென சித்ராவின் வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. வழக்கமாக செல்வராஜ் வீட்டிற்கு வந்து கதவை தட்டுகையில், சித்ராவின் பெயரை கூறி தட்டுவார். ஆனால், சம்பவத்தன்று இரவில் பெயரை சொல்லாமல் கதவு தட்டப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சித்ரா, அருகில் இருக்கும் சரஸ்வதிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்கவே, அவர் உடனடியாக அவரது மகன் ஸ்ரீகாந்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்போது, சித்ராவின் வீட்டிற்கு முன்புறம் இரண்டு பேர் நிற்கவே, ஆட்கள் வந்ததை கண்டததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இவர்களை அங்குள்ளவர்கள் சந்தித்து துரத்திய நிலையில், பண்ணையின் வாயில் கதவு அருகே செல்வராஜ் பிணமாக இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Kinathukadavu Farm Security Murder by Strangers 28 March 2021