#Breaking: ம.நீ.ம நிர்வாகிகள் பலரையும் இழந்துவிட்டோம் - வேதனையின் உச்சத்தில் கமல்.!!
Coimbatore Kamal Hassan Pressmeet 3 August 2021
கொரோனாவால் எங்களின் கட்சி நிர்வாகிகள் பலரையும் இழந்துவிட்டோம் என கமல் ஹாசன் வேதனை தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கோவை தெற்கு மக்களுக்கு எங்களின் வணக்கம். அவர்கள் நேர்மையாக வாக்களித்தார்கள். அவருக்கு நன்றியும், வணக்கமும் செலுத்த வந்துள்ளேன். கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததால் முன்னதாகவே வர முடியவில்லை.
நாங்கள் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால் இங்கு வந்துள்ளோம். கொரோனா தொற்று என்பது மக்களுக்கான நெருக்கடி. அரசின் கடமை என்று ஒன்று உள்ளது. கொரோனா அலை தேதி குறித்து வருவதில்லை. திடீரென எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கொரோனா காலத்தில் எங்களது கட்சியின் சார்பாகவே பலரும் உயிரிழந்துள்ளார். அவர்கள் மக்கள் பணியை செய்தவர்கள். நாங்கள் சென்னையில் இருந்து கொண்டு பாதுகாப்புடன் பணியை செய்யுங்கள் என சொல்ல மட்டுமே முடிந்தது. அதனால் பல நல்ல தொண்டர்களை, சகோதர்களை நாங்கள் இழந்துவிட்டோம் " என்று தெரிவித்தார்.
முன்னதாக தனக்கு தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள நடிகர் மற்றும் ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கோவை வந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Kamal Hassan Pressmeet 3 August 2021