தனிமையில் இனிமை கண்ட காதலி.. கதறிதுடித்த சம்பவம்.! காதலன் செய்த மோசமான காரியம்.!  - Seithipunal
Seithipunal


கோவையில் காளைப்பட்டி நேரு நகரை சேர்ந்த திலகவதி(33) என்ற பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் திலகவதி இரண்டு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். 

அதே பகுதியில் பத்மநாபன்(37) என்பவரும் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் சொந்தமாக கோழி கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அடிக்கடி கோழி வாங்க சென்ற திலகவலிக்கும், பத்மநாபனுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. 

முதலில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதல் துளிர்விட தனியாக சந்தித்து உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அதுபோல நேற்றுமுன்தினம் இவர்கள் இரண்டு பேரும் வீட்டின் அருகே இருக்கும் கொட்டகையில் சந்தித்து தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உல்லாசமாக இருந்த திலகவதிக்கும், பத்மநாபனுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

திலகவதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பத்மநாபனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, பத்மநாபன் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன் அருகே இருந்த சுத்தியல் கொண்டு திலகவதியை தாக்கியதில் அவர் உயிரிழந்து இருக்கின்றார். அதன்பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுஇருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore illegal affair murder and suicide police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->