சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்.. உயிருக்கு போராடும் சிறுமி.. கோவையில் அரங்கேறிய கொடூரம்.!
Coimbatore girl sexual abuse torture by culprit capture video when she is bating
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் வடக்கலூர் பகுதியை சார்ந்த 18 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 10 ஆம் தேதி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சிறுமியை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை செய்கையில், சிறுமியை பெற்றோர்கள் அலைபேசி உபயோகம் செய்ததை கண்டித்ததால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த காமுக கொடூரன், சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான். மேலும், அந்த விடியோவை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனாலேயே சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பிள்ளைகள் தங்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்களின் பெற்றோர் அல்லது உங்களின் மீது பாசம் வைத்துள்ள உறவினர்களிடம் விஷயத்தை தெரியப்படுத்துங்கள். அவர்கள் உங்களின் பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கையை எடுப்பார்கள். தங்களின் இன்னுயிரை நீத்து, காமுகனின் கொடூரத்திற்கு இறையாகாதீர்கள்.
இது போன்ற காமுகன்களுக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்களையும் திருத்தும் செய்ய வேண்டும் என்பதே, பெண் பிள்ளைகளை பெற்றோரின் ஏக்கமாக இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore girl sexual abuse torture by culprit capture video when she is bating