சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்.. கோவையில் 3 நாட்களில் தினமும் அதிர்ச்சி..!!
Coimbatore girl sexual abuse police investigation
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தார் விக்னேஸ்வரன் (வயது 24). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூரை சார்ந்த 17 வயது சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே, இவர்களின் காதலிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதியன்று சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர்.
இது குறித்த விசாரணையில், விக்னேஸ்வரன் சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. சிறுமியை மீட்ட காவல் துறையினர், விக்னேஸ்வரனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனைப்போன்று சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவர் ரமேஷ் (வயது 33). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் நிலையில், கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். மேலும், தனக்கு திருமணம் முடிந்துள்ளதை மறைத்து, காமுகன் சிறுமியை வடவள்ளி பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு ரமேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கோவை மாநகரில் 3 நாட்களாக 3 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore girl sexual abuse police investigation