காதல் செய்து கழட்டிவிட்ட..... பெங்களூரில் இருந்து பறந்து வந்த காதலி... கோவையில் சம்பவம்.!!
coimbatore girl from bangalore to stop her love boy marriage
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் அருகேயுள்ள குமரக்கவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியை சார்ந்த 29 வயது பொறியியல் பட்டதாரி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிருவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவருடன் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சார்ந்த 27 வயது பெண்மணி பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டதால், வாலிபர் தனது சொந்த ஊருக்கு திரும்பவே, வாலிபருக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தம்பாடி பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் திருமணம் நடக்க நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாலிபர் தனது காதலியிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
இது தொடர்பாக பெண் தனது அலுவலக தோழரிடம் விசாரணை செய்த சமயத்தில், திருமணத்திற்கான நிச்சயம் நடந்தது தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெண், தனது காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கர்நாடக அரசிடம் முறையான அனுமதி பெற்று, பெங்களூரில் இருந்து இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டு குன்னத்தூருக்கு வந்துள்ளார்.
குன்னத்தூர் காவல் துறையினர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், உண்மையை அறிந்த காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காதலனின் இலலத்திற்கு பெண் சென்று நிலையில், காதலியை பார்த்த கொடூரன் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்து கொள்ளவே, பெண் விடாப்பிடியாக வாயிலில் இருந்து நியாயம் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் பெண்ணை பெங்களூருக்கு புறப்பட்டு செல்லுமாறு கூறிய நிலையில், இதனை ஏற்காத பெண்ணை அடித்து தாக்கியுள்ளான். இதனையடுத்து பெண் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் விஷயத்தை தெரிவிக்கவே, பெண் அங்குள்ள குன்னத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினர் காதலனின் குடும்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்ணை காதலன், காதலனின் தந்தை மற்றும் அவரது உறவினர் ஆந்திராவிற்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பெண் தனது சொந்த ஊருக்கு செல்ல மாட்டேன் என்றும், பெங்களூருக்கு செல்கிறேன் என்று அழுதுகொண்டே காரில் புறப்பட்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
coimbatore girl from bangalore to stop her love boy marriage