நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை... கோவையில் அரங்கேறிய கொடூரம்.!!
Coimbatore Gandhipuram Market Murder Police Investigation
கோவையில் ஒருவரை, ஏழு பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியை சார்ந்தவர் பிஜு. இவரை இன்று 7 பேர் கொண்ட கும்பலொன்று, பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில், வியாபாரிகள் இடையே நடந்த முன்பகை காரணமாக, இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Gandhipuram Market Murder Police Investigation