நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை... கோவையில் அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


கோவையில் ஒருவரை, ஏழு பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியை சார்ந்தவர் பிஜு. இவரை இன்று 7 பேர் கொண்ட கும்பலொன்று, பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், வியாபாரிகள் இடையே நடந்த முன்பகை காரணமாக, இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Gandhipuram Market Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->