என்ன தில்லு எங்க தலைவருக்கு... சீரியல் பார்த்துகிட்டே ஓட்டுவோம்..! உருப்படியா வீடு போயி சேர்ந்தா சரி..!
Coimbatore Gandhipuram Man drives two Wheeler Watching Serial
செல்போனில் சீரியல் பார்த்தபடியே வாகன ஓட்டி ஒருவர் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய சம்பவம் நடந்துள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களுக்கு பெண்கள் முதல் ஆண்கள் வரை அடிமைகளாக இருந்து வருவது ஒருபுறம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் அந்த சீரியலை பார்க்காவிட்டால், தங்களுக்கு பைத்தியமே பிடித்து விடும் என்ற பித்து நோயாளிகளும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு சின்னத்திரை தொடர் பார்க்கும் அன்பர்களின் ஆண்கள், பெண்கள் பேதம் இல்லாமல் இருபாலரும் இருக்கின்றனர். எதோ ஒரு நாள் தொடரை பார்க்க இயலாமல் போய்விட்டால், அன்றைய தினத்தில் என்ன ஆனது? என்று தெரியாமல் பெரும் பதைபதைப்புக்கு உள்ளாகி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நபர்களும் இங்கு இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் சீரியல் பார்த்தபடியே வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்தபடி தனது இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளார்.
இதனை கவனித்த மற்றொரு வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் கண்டனத்தை சந்தித்துள்ள நிலையில், காவல் துறையினர் விடீயோவின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Gandhipuram Man drives two Wheeler Watching Serial