காதலிக்க மறுத்த சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அடித்து கொடுமை செய்த நாடகக்காதலன்..!!
Coimbatore drama love culprit torture to child girl
கோவையில் காதலிக்க மறுத்த சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த பகுதியில் வசித்து வரும் காமுக கொடூரன் தமிழ்செல்வன். தமிழ்செல்வன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறான்.
இவன் சிறுமியின் மீது ஒருதலை நாடக காதல் வயப்பட்டு இருந்துள்ளார். மேலும், சிறுமியிடம் இவன் பலமுறை காதலையும் கூறி தொந்தரவு செய்துள்ளான். இதனை ஏற்க மறுத்த சிறுமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று காமுகன் சிறுமியிடம் சென்று காதலை வெளிப்படுத்திய நிலையில், இதனை சிறுமி வழக்கம்போல ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமுகன் கொடூரன், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளான்.
மேலும், புகைப்படத்தை இணையதளத்தில் ஆபாசமாக பதிவு செய்திடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பதறிப்போன பெற்றோர், இந்த விஷயம் தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore drama love culprit torture to child girl