கோவை: பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றுவதே எனது பொழுதுபோக்கு - காமுகனின் பகீர் வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட கோவை கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

சென்னையில் உள்ள இராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பேஷன் டெக்னாலஜி படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், படிப்பு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கும், அறிவதற்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை உபயோகம் செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மாணவியின் புகைப்படத்தை எடுத்து, வேறொரு ஆபாச புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் இராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மயிலாப்பூர் சைபர் கிரைம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், புகைப்படத்தை பதிவேற்றி நபர் சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவன் பரசுராமன் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, பரசுராமனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பரசுராமன் கோவையிலுள்ள குமரகுரு கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முதலாம் வருடம் பயின்று வந்த நிலையில், பரசுராமனின் தந்தை ஆடை ஏற்றுமதி தொழில் அதிபராகவும் இருந்து வந்துள்ளார். 

வசதியான குடும்பம் என்பதால் மாணவனுக்கு விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்த நிலையில், வீட்டில் இருக்கும் தனி அறையில் ஆபாச இணையதளங்களை பார்ப்பது, பெண்ணின் புகைப்படங்களை மாற்றம் செய்வதற்காக என தனி செயலி வைத்து இளம்பெண்களின் புகைப்படத்தை மாபிங் செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், பொழுது போக்கிற்காக ஆபாசமாக பெண்களின் புகைப்படத்தை மாபிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளான். பரசுராமனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Culprit Cheat Photo Police Investigation 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->