மகளிடம் பேசவிடாத தாயை தாக்கிய கொடூரன்.. கோவையில் அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியை சார்ந்த 22 வயது இளம்பெண், அப்பகுதியில் செயல்பட்டு வந்த எஞ்சினியரிங் நிறுவனத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். 

இதே நிறுவனத்தில், கலைக்கோவன் (வயது 32) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், இருவரும் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அடிப்படையில் அலைபேசியில் பேசி வந்துள்ளனர். இந்த விஷயத்தை கவனித்த இளம்பெண்ணின் தாய் தனது மகளை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் கலைக்கோவன் இளம்பெண்ணின் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அகவல் துறையினர், கொடூரன் கலைக்கோவனை கைது செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Culprit Attacks Girl Friend Mother 23 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->