கெஞ்சியும் கொஞ்சியும் கேட்ட காதலன்.. போனில் உறவாடி, குடும்பத்தையே அதிரவைத்த நாடக காதல்..! பெண்களே உஷார்.!
Coimbatore College Studied Drama Love Culprit Cheat girl sent Nude photo Her Father WhatsApp
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பெண்மணி செல்வி (22 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவன் தேவேஷ். தேவேஷ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளான். இதே கல்லூரியில் மாணவி செல்வியும் பயின்று வந்துள்ளார்.
இவர்களுக்குள் முதலில் நட்பாக ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. கடந்த 8 மாதமாக அமலாகியிருந்த கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கம் காரணமாக, இருவரும் மணிக்கணக்கில் அலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
அந்த சமயத்தில், காமுக எண்ணம் கொண்ட நாடக காதலன் தேவேஷ் கல்லூரி மாணவியிடம், " உன்னை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும், உனது போட்டோவை அனுப்பி வை " என்றும் கூறியுள்ளான். மேலும், இருவரும் வீடியோ காலில் பேசி வந்த சூழலிலும், சாமர்த்தியமாக பேசி புகைப்படத்தை வாங்கியுள்ளான்.
இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக காதல் மழையை பொழியவைத்த காமுக கொடூரனின் காதல் வலையில் சிக்கிய மாணவி விபரீதம் அறியாமல் பேசி வந்துள்ளார். பின்னர் மாணவியிடம் நிர்வாணமாக புகைப்படம் கேட்டு காதல் வார்த்தை கூறி ஆசையை அதிகரித்து புகைப்படத்தை பெற்றுள்ளான்.
இந்நிலையில், தினமும் மாணவியின் செயல்பாடுகளை கவனித்து வந்த பெற்றோருக்கு, செல்வியின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனது மகளை பெற்றோர்கள் கண்டிக்கவே, தேவேஸுடன் சரியாக பேசாமல் இருந்துள்ளார். மேலும், வாட்சப்பில் தேவேஷ் குறுஞ்செய்தி அனுப்பியதற்கு வீட்டில் மாட்டிக்கொண்டதை தெரிவித்து, இனி உன்னுடன் பேசமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காமுக கொடூரன் கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்துவிட்டு, அவரின் தந்தைக்கு வாட்சப் மூலமாக அவரது மகளின் நிர்வாண புகைப்படத்தையே அனுப்பி வைத்துள்ளான். இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய செல்வியின் தந்தை, மகளிடம் விசாரணை செய்கையில் பெரும் அதிர்ச்சி தகவலாக மேற்கூறியவை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகன் தேவேஷை கைது செய்துள்ளனர். இவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் சென்று எதிர்கால வாழ்க்கையை சிறப்புடன் அமைக்க அடித்தளமாக விளங்கும் படிப்பை மேற்கொக்கும் நேரங்களில் வரும் பருவ காதல்கள் தேவையற்றது. பருவத்தில் ஏற்படும் காதலாக இருந்தாலும், 28 வயதில் ஏற்படும் காதலாக இருந்தாலும் சுதாரிப்புடன் செயல்படவில்லை என்றால் எந்த மாதிரியான விளைவுகள் நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.
காதலன் என்ற போர்வையில் சுற்றி திரியும் பல கொடூர எண்ணங்கள் கொண்ட கயவர்களால் அரங்கேறும் துயரங்களில் இது முதலும் இல்லை. கடைசியும் இல்லை. இன்றுள்ள கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள், குறும்படங்கள், புரட்சி என்ற பெயரில் விதைக்கப்பட்டுள்ள வன்மங்கள் தொடர்பான விஷயங்களை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எந்த விதமான தயக்கமும் இன்றி கூறுவதே, இது போன்ற செயல்களில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றும் என்பதே நிதர்சனம்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore College Studied Drama Love Culprit Cheat girl sent Nude photo Her Father WhatsApp