தங்கையின் மகளை பாலியல் வன்மத்தோடு தூக்கி சென்று கொலை செய்த கொடூரனின் அதிர்ச்சியாக்கும் வாக்குமூலம்.! அரங்கேற்றிய கபட நாடகம்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அந்நூர் அருகேயுள்ள காரியாகவுண்டனூரை சார்ந்தவர் கனகராஜ். இவரது மனைவியின் பெயர் காஞ்சனா. இவர் ஜேசிபி கனரக இயந்திரம் வாடகைக்கு விடும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதுடைய அம்ருதா என்ற பெண் குழந்தை உள்ளது. 

அங்குள்ள விளாங்குறிச்சியில் காஞ்சனாவின் பெற்றோரின் இல்லம் இருக்கும் நிலையில்., இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கு தங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில்., உறவினர்களும் வருகை தரவே., தம்பதி இருவரும் வீட்டிற்குள்ளே உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். வீட்டிற்கு வருகை தந்த உறவினர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளிய கயிற்றுக்கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில்., அதிகாலை இரண்டரை மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். பின்னர் காலை நான்கரை மணிக்கு எழுந்து பார்த்த சமயத்தில்., குழந்தை இவர்களுடன் இல்லை. குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கும் என்று எண்ணி வீட்டை சுற்றிலும் தேடியுள்ளனர். 

குழந்தையை அங்குள்ள அணைத்து இடத்திலும் தேடிய நிலையில் குழந்தை காணாது பதறிய பெற்றோர்., அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்கு அருகே சென்று பார்த்த சமயத்தில் குழந்தை கிணற்றுக்குள் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை கயிற்றை கட்டி வெளியே எடுத்த நிலையில்., குழந்தை எந்த விதமான செயல்படும் இன்றி கிடந்துள்ளது.  

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பல சந்தேகத்துடன் நடைபெற்று வந்த விசாரணையானது பின்னர் சிறுமியின் மாமாவின் பக்கம் திருப்பவே., பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கைதான கொடூரன் ரகுநாத் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பால் வியாபாரம் செய்து வரும் எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் சென்று மது அருந்தினேன். 

அதிகளவு மது அருந்தியதால் போதை தலைக்கேறிய ணியில் வீட்டிற்கு வந்த சமயத்தில் குழந்தையை கண்டேன். குழந்தையை பார்த்தவுடன் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் குழந்தையுடன் தாய் இருப்பதை கண்டு அமைதிகாத்தேன். இரவு அனைவரும் உறங்க சென்ற சமயத்தில்., குழந்தையை தூக்கி கொண்டு சென்றேன்.

இந்த நேரத்தில்., குழந்தை தீடீரென அழுத்தத்தால் பதற்றமடைந்த நான் குழந்தையின் வாயை பொத்தவே., குழந்தை சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மயங்கியது. இதனையடுத்து குழந்தை இறந்ததாக நினைத்து கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெறியாது போல படுத்துக்கொண்டேன். பின்னர் காஞ்சனா எழுந்த பின்னர் குழந்தை காணும் என்று கூறவே., அவர்களுடன் சந்தேகம் ஏற்படாத வகையில் குழந்தையை தேடினேன் பின்னர் காவல் துறையினர் விசாரணை செய்து என்னை கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளான். 

இதுமட்டுமல்லாது இந்த சம்பவத்தை அறிந்து அங்குள்ள பத்திரிகையாளர்கள் விசாரணை மேற்கொள்ள சென்ற சமயத்தில்., எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமளிக்காது வகையில்., எனது தங்கை மற்றும் மச்சானுக்கு எந்த விதமான விரோதியும் கிடையாது. நாங்கள் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில் ., யார் இதனை செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் பேட்டியளித்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore child killed case police investigation report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->