16 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி கடத்தல்.. கண்ணீரில் பெற்றோர்.!! - Seithipunal
Seithipunal


குனியமுத்தூர் பகுதியில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் இடையன்குளம் பகுதியை சார்ந்தவன் ஹர்ஷத். இவன் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறான். இதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

சிறுமியை காமுகன் காதல் வலையில் வீழ்த்திய நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று மாயமாகியுள்ளார். சிறுமியை காணாது தேடி அலைந்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை ஹர்சத் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஹர்சத்தின் அலைபேசி எண்ணை வைத்து, அவனின் இருப்பிடம் கண்டறிந்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்த காவல் துறையினர், சிறுமியை ஹர்சத்திடம் இருந்து மீட்டுள்ளனர். சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமண ஆசையில் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. ஹர்சத்தை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore child girl kidnapped by drama love police rescue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->