இருவேறு துயரங்கள்.. துடிதுடித்து உயிரிழந்த சிறுமிகள்.. கோவையை உலுக்கிய கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள் ஞான ஜோதி. இவரது மகள் ஜெரலின் நேகா (வயது 9). இவர் கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், துணி கழுத்தை இறுக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளார். இவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், இந்த சோகமானது ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று மற்றொரு சோக சம்பவமும் அரங்கேறியுள்ளது. கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடைப் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் பவதாரணி (வயது 9). சம்பவத்தன்று சிறுமி இரண்டு அடுக்கு கட்டிலில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பென்சில் தவறி கீழே விழுந்துள்ளது. பென்சிலை எடுக்க முயன்ற சிறுமி கட்டிலிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து, தலையில் அடிபட்டு உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த இரண்டு சோகமும் ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore child died police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->