போதையில் அதிவேகத்தில் பறந்த கார்.. தலைகுப்புற போட்டு சம்பவம்.. டாஸ்மாக் அலப்பறைகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் மதுபானம் வாங்கிய குடிமகன்கள், வீட்டிற்கு சென்று அருந்த பொறுமை இல்லாது திறந்த வெளியில் மது அருந்தி வீட்டிற்கு செல்ல துவங்கினர். இதனால் மது போதையில் பலரும் வாகன விபத்துகளை ஏற்படுத்தினர். 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 27). இவர் சலூன் கடை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், நண்பர்களான ஒலம்பஸ் பகுதியை சார்ந்த நித்தின் (வயது 20), பீட்டர் (வயது 20), வடவள்ளியை சேர்ந்த ஹரிகரன் (வயது 26) ஆகியோருடன் சேர்ந்து மது வாங்க காரில் சென்றுள்ளனர். 

மதுபானம் வாங்கிய நபர்கள் வனப்பகுதியில் வைத்து மது அருந்திவிட்டு, நண்பர்களை வீட்டில் சேர்ப்பதற்கு காரை இயக்கியுள்ளார். ரஞ்சித்குமார் காரை இயக்கவே, அனைவரும் போதையில் இருந்த நிலையில், தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் பகுதியில் கார் தலைகுப்பற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நால்வரும் காயமடைந்துள்ளனர். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிவேகத்தில் காரை போதையில் கண்முன் தெரியாமல் இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore car accident due to drinking alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->