கோவையில் அரங்கேறிய விபத்தின் சோக பின்னணி.. கண்ணீர் தகவல்.!!
Coimbatore accident police investigation
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 21). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கியுள்ளார். கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பணிக்கு சேர்ந்துள்ளார்.
சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் இந்திரநேசன் (வயது 23), இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வடமதுரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). ராமசாமி ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரிஜார்ஸ் (வயது 23). பிரிஜார்ஸ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகின்றனர். இவர்கள் 5 பேரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் 5 பேரும் கல்லூரி படித்த நண்பரான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவரின் பிறந்தநாளை கொண்டாட அவரது வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். காரில் சென்ற இவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, நள்ளிரவு 2 மணியின் போது ஐந்து பேரும் காரில் திரும்பியுள்ளனர்.
இவர்களின் கார் அங்குள்ள அணைகட்டி பகுதியில் வந்த நேரடித்தில் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த விபத்தை கண்ட அப்பகுதி வழியாக வந்த லாரி ஓட்டுனர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கடப்பாறையால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்க முடிவு செய்ய முயற்சி செய்தும், அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டள்ளார். இதில் கார்த்திக் ராஜா, மோகன் ஹரி, இந்திர நேசன், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். நான்கு பேரின் பெற்றோரும் தங்களது மகனை இழந்து விட்ட வருத்தத்தில், கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore accident police investigation