8 வயது சிறுமியிடம் அத்துமீறிய காமுகன்.. கோவையில் அதிர்ச்சி.!!
Coimbatore 8 year child sexual torture culprit arrest by police
இந்தியாவின் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சார்ந்தவர் மாதவன் (வயது 32). இவர் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையம் அருகேயுள்ள அண்டகாபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசித்து வந்த 9 வயது சிறுமி வீட்டு முன்னர் தண்ணீரை ஊற்றி விளையாண்டு கொண்டு இருந்த நிலையில், இதனைக்கண்ட மாதவன் கண்டித்துள்ளான்.
இதனைப்பார்த்த சிறுமியின் தாயாருக்கும், மாதவனிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியை வீட்டின் உள்ளே சிறுமியின் தாய் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் சிறுமி வீட்டின் வாயிலில் வைத்து விளையாண்டு கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில், அங்கு வந்த காமுகன் சிறுமியிடம் அத்துமீறவே, சிறுமி தனது தாயிடம் விபரத்தை கூறியுள்ளார். இதனையயடுத்து இது குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுகன் மாதவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore 8 year child sexual torture culprit arrest by police