இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு.. அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
Coimbatore 2 days Lockdown announced by District collector
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,43,297 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் 1,275 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நாளை மாலை 5 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore 2 days Lockdown announced by District collector