துடியலூர்: குடும்ப நண்பர் போல பழகி கொடூரம்.. 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் வெள்ளக்கிணறு பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் சிவகுமரேசன் (வயது 40). இவர் அப்பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லை. 

இவர் நட்புடன் பழகி வந்த குடும்பத்தை சார்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவருக்கும் அதிகளவு வித்தியாசம் என்பதால், தனது மகள் போல பிள்ளையை பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த கொடூரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி ஏதும் கூறாமல் இருந்து வந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படவே, சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் சிறுமியிடம் விசாரணை செய்ததில் காமுகன் சிவகுமரேசனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் அனந்தநாயகி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore 15 year child girl Sexual abuse and Pregnant by Family Friend 1 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->