ஓட்டலில் உணவு சாப்பிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! மீஞ்சூர் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தனியார் உணவகத்தின் சாப்பாடுகளில் கரப்பான்பூச்சி, பூரான் போன்ற விஷ பூச்சிகள் இருப்பதாக வாடிக்கையாளர் உணவக நிர்வாகியிடம்  தகராறு செய்த வீடியோவானது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் ரெயின்போ என்கிற தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்டபோது கரப்பான்பூச்சி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து கரப்பான்பூச்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவு பரிமாறும் நபரிடம் கேட்டு உணவாக நிர்வாகத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் பாலாஜி கேப் என்ற உணவகத்திலும் பூரான் கிடந்ததாக வாட்ஸப்பில் தகவல் வெளியானது. 

இதனைப்போன்று மீஞ்சூரில் தனியார் விடுதி வளாகத்திலுள்ள உணவில் கரப்பான் பூச்சி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான காட்சிகளும் வைரலாகி வருகிறது. 

உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து அவ்வப்போது உணவு பாதுகாப்புத் துறையினர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cockroach in meenjur hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->