மூன்று மணி நேரத்தில் உத்தரவை மாற்றிய முதல்வர் பழனிசாமி.! ரத்து செய்து உத்தரவு.!
CM Palanisamy cancel the govt order about factory running
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்து விதமான தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் புதிதாக 13 வகையான தொழிற்சாலைகளை சேர்த்து, இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இன்று மாலை ஆணை வெளியிட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகள், கண்ணாடி, சாய நிறுவனங்கள், தோல் பதனிடுதல், காகிதம், டயர், சுத்திகரிப்பு நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், சிமென்ட், இரசாயனங்கள், உரங்கள், ஜவுளி, எஃகு உள்ளிட்ட 13 துறைகளைச் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த தொழிற்சாலைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது, கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மூன்று மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
CM Palanisamy cancel the govt order about factory running