தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை! தியேட்டர், மால்களை மூடவும் உத்தரவிட்டார் முதல்வர் பழனிசாமி! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகளவில் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதன்படி 15 நாட்களுக்கு பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள் வணிக வளாகங்களை வரும் 31ம் தேதி வரை மூடி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM palanisamy announced holidays for corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->