தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்.? இன்று வெளியாகப்போகும் அறிவிப்பு.!!
cm mk stalin meeting for lockdown
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27,507 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 47 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 2,13,692 சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. தொற்று பரவல் தொடங்கும் பட்சத்தில் ஞாயிற்று கிழமை ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் நிலை குறித்தும், தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கலாம அறிவிக்கலாமா.? அல்லது கட்டுபாடுகளை அறிவிக்கலாமா.? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சுகாதாரத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் அறிவிப்பை வெளியிடுவார்.
English Summary
cm mk stalin meeting for lockdown