எல்லாமே பொய்யி.. நான் வாங்கியது எத்தனை தெரியுமா..? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,  2016-ல் ஊடகங்கள் கருத்துக் கணிப்பை சொன்னார்கள்.

சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் மட்டும் அதிமுக வெற்றிபெறும் என்றும், நான் தோல்வி அடைவேன் என்றும் பத்திரிகையிலும், ஊடகத்திலும் செய்தி போட்டீர்கள். ஆனால் சேலம் மாவட்டத்தில் 42 ஆயிரம் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

சேலம் மாவட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட 3 இடங்களுக்கு பதிலாக 10 இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றோம். இதுதான் கருத்துக்கணிப்பின் நிலவரம்.

இது கருத்துக்கணிப்பு அல்ல.கருத்து திணிப்பு. 23-ந் தேதி ஊடகங்கள் சொல்வது சரியா அல்லது நாங்கள் சொல்வது சரியா என்று நீங்களே சொல்லுங்கள்.

நான் தமிழகத்தை பற்றி மட்டும்தான் நான் பேசுகிறேன். மற்ற மாநிலத்தை பற்றி எனக்குத் தெரியாது.

தமிழகத்தின் நிலவரம்தான் எனக்கு தெரியுமே தவிர மற்றவை எதுவும் தெரியாது. நாங்கள் தேசிய கட்சி இல்லை.

இது மாநில கட்சி. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவும், கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழகமும், கூட்டணி கட்சிகளும் வெற்றிபெறும்.

இதுபோல சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 இடங்களிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே 2016-ல் இதேபோல கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.

அந்த கருத்துக்கணிப்பு பொய் என்று நிரூபணம் ஆனது. அதேபோல இப்போது வந்துள்ள கருத்துக் கணிப்பும் பொய்யாகும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm edappadi palanisamy pressmeet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->