முக்கிய பிரபலம் மறைவு அதிர்ச்சியடைந்த தலைவர்கள்.! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்(வயது 87) உடல் நலக்குறைவால் காலமானார். பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பணப்பட்டுவாடா, வன்முறையை பெருமளவில் கட்டுப்படுத்தி  தேர்தல் ஆணையத்தில் பல திருத்தங்களை மேற்கொண்ட டி.என்.சேஷன், இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பை உயர்த்தியவர். பின் பதவி ஓய்வு பெற்ற அவர் சென்னை அடையாறில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்தார்.  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர். நேற்று இரவு 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் மாரடைப்பால் சேஷன் காலமானார்.

இதையயடுத்து, சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு, சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும் தெரிந்த அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை உடையவர் சேஷனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைதேன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு, இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி என் சேஷன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழக மற்றும் மத்திய அரசு துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm and ttv condolence to seshan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->