ஸ்விச் ஆஃபில் போன்.. தாய், தந்தையை தேடி வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சென்னையில் பயங்கரம்.!
chorompet boy friend killed lover parents
சென்னை குரோம்பேட்டை பகுதியில் வசித்து வரும் 59 வயதான ஆறுமுகம் என்பவருக்கு 50 வயதில் மஞ்சுளா என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் வசந்தி தனது கணவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வருகிறார்.
அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மோசஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். மோசஸ் போதைக்கு அடிமையான நிலையில் மனைவிக்கு அதிக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், வசந்தி தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
அப்போது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் ஒரு வாடகை வீட்டிற்கு சென்று குடியேறினார்கள். ஆனால் மோசஸின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். எனவே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சகோதரியின் வீட்டிற்கு வசந்தி சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து வசந்திக்கு போன் செய்த மோசஸ் நீ வீட்டிற்கு வரவில்லை என்றால் உன் தாய் தந்தையை கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதை வசந்தி பெரிதுபடுத்திக் கொள்ளாமல் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
ஆத்திரமடைந்த மோசஸ் வசந்தியின் தாய் தந்தையிடம் சென்று கூற அவர்கள் மோசஸிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, தந்தை ஆறுமுகம் மற்றும் தாய் மஞ்சுளா இருவரையும் நயமாக பேசி தாங்கள் குடியிருந்த வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று பூட்டி இருவரையும் உள்ளே வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
வசந்தி எங்கே இருக்கிறாள் கூறுங்கள் என்று இருவரையும் தொந்தரவு செய்துள்ளார். அதன் பின் கழுத்தை அறுத்து அவர்களை கொலை செய்து விட்டு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். தாய் தந்தைக்கு வசந்தி போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.
அதன் பின் நேரில் சென்று பார்த்துள்ளனர். அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும் அவர்கள் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் அழுகிய நிலையில் அவர்களது பிணத்தை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மோசஸை போலீஸ் தேடி வருகின்றனர்.
English Summary
chorompet boy friend killed lover parents